search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மியாமி ஓபன்"

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் டிமிட்ரோவ் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது அரையிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.

    இதில் டிமிட்ரோவ் 6-4 என முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டை ஸ்வரேவ் போராடி 7-6 (7-4) என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை டிமிட்ரோவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் முன்னணி வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் கைப்பற்றி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • போபண்ணா ஜோடி இறுதிப் போட்டியில் இவான் டோடிக் (குரோசியா)- ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.
    • 14-வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியாகும்.

    மியாமி ஓபனில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, மார்சன் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்)- ஹொராசியோ ஜெபலாஸ் (அர்ஜென்டியா) ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    துபாய் சாம்பியன்ஷிப் காலிறுதியில் தோல்வி, இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் ரவுண்ட் ஆஃப் 32-ல் வெளியேற்றம் ஆகியவை காரணமாக இரட்டையர் பிரிவில் போபண்ணா 2-வது இடத்திற்கு பின்தங்கினார். தற்போது மியாமி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார். ஆஸ்திரேலிய ஓபனில் பதக்கம் வென்றதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். மேலும், தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

    போபண்ணா ஜோடி இறுதிப் போட்டியில் இவான் டோடிக் (குரோசியா)- ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது. போபண்ணாவின் 14-வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியாகும். மேலும், மியாமி தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார். ஏடிபி தொடர் அளவிலான 63-வது இறுதிப் போட்டி இதுவாகும். இரட்டையர் பிரிவில் 25 சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    போபண்ணா- எப்டன் ஜோடி ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரின் இறுதிப் போட்டியில் ஐந்தாவது முறையாக களம் காண்கிறது. லியாண்டர் பயேஸ்க்குப் பிறகு அனைத்து வகையிலான 9 ஏடிபி மாஸ்டர்ஸ் (9) தொடரிலும் இறுதிப் போட்டிக்கு நுழைந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா வென்றார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் எகடரின் அலெக்சாண்ட்ரோவா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

    இதில் அலெக்சாண்ட்ரொவா முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் 3-6, 6-4, 6-4 என செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • மெட்வதேவ் காலிறுதியில் 6-2, 7(9)-6(7) என நேர்செட் கணக்கில் நிக்கோலஸ் ஜார்ரியை வீழ்த்தினார்.
    • சின்னர் தாமஸ் மக்காச்-ஐ 6-4, 6-2 என எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மியாமி ஒபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3 நிலை வீரரான டேனில் மெட்வதேவ், நிக்கோலஸ் ஜார்ரி-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மெட்வதேவ் 6-2 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கைப்பற்ற கடுமையான போராட வேண்டியிருந்தது. டை-பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை மெட்வதேவ் 7(9)-6(7) எனக் கைப்பற்றினார். இதன் மூலம் 2-0 (6-2, 7(9)-6(7)) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜென்னிக் சின்னர்- தாமஸ் மக்காச்-ஐ எதிர்கொண்டார். இதில் 2-ம் நிலை வீரரான சின்னர் 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் மெட்வதேவ்- சின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    இன்று நடைபெறும் காலிறுதி போட்டிகளில் அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- மரோஸ்சன் ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதியில் மோதுவார்கள்.

    • முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என இழந்தது.
    • 2-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் போபண்ணா ஜோடி அதை கைப்பற்றியது.

    மியாமி ஒபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணைந்து விளையாடி வருகிறது.

    இந்த ஜோடி செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா)யை காலிறுதியில் எதிர்கொண்டது.

    முதல் இடத்தில் இருக்கும் போபண்ணா ஜோடிக்கு செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது.

    முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என அதிர்ச்சிகரமாக இழந்தது. 2-வது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடியது. இருந்தபோதிலும் செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியாக போபண்ணா ஜோடி 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றியது.

    3-வது செட்டில் போபண்ணா ஜோடி கை ஓங்கியது. அந்த செட்டை 10-7 எனக் கைப்பற்றி போபண்ணா ஜோடி 3-6, 7(7)-6(4), 10-7 என வெற்றி பெற்றது. இதன் மூலம் போபண்ணா- மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போபண்ணா ஜோடி, மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 7(7)-6(3) என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தாமஸ் மகாச்- ஜேனிக் சின்னெர், அலேக்சாண்டர் ஸ்வெரேவ்- பேஃபியன் மரோஸ்சன், நிக்கோலஸ் ஜார்ரி- டேனில் மெட்வதேவ், அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தானின் ரிபாகினா வென்றார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலீனா ரிபாகினா, டென்மார்க்கின் கிளாரா டாசனுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் 3-6, 7-5, 6-4 என செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, இங்கிலாந்தின் பெய்டன் ஸ்டீர்ன்சுடன் மோதினார். இதில் அசரென்கா 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா வென்றார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை எலீசபெட்டாவுடன் மோதினார்.

    இதில் ஒசாகா 6-3, 6-4 என நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பிரெட்டெனியுடன் மோதினார்.

    இதில் ஆண்டி முர்ரே முதல் செட்டை 4-6 என இழந்தார். இதனால் சுதாரித்த முர்ரே அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் தோல்வி அடைந்தார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார்.

    முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-1 என எளிதில் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை படோசா 6-4, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுக்கு பின் சிமோனா ஹாலெப் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று தொடங்கியது.
    • தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகலை ஹாங்காங் வீரர் வீழ்த்தினார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று தொடங்கியது.

    நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஹாங்காங்கின் சாக் லாம் கோல்மேன் வாங்குடன் மோதினார். இதில் சுமித் நாகல் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்த வாங் அடுத்த இரு செட்களை 6-1, 7-5 என கைப்பற்றி அசத்தினார்.

    இதன்மூலம் சுமித் நாகல் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், மியாமி ஓபன் போட்டியில் இருந்து விலகுவதாக நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் அறிவித்தார்.

    இதுதொடர்பாக, ஜோகோவிச் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வணக்கம் மியாமி. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு நான் மியாமி ஓப்பனில் விளையாட மாட்டேன். எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் எனது தனிப்பட்ட மற்றும் தொழில் அட்டவணையை நான் சமநிலைப்படுத்துகிறேன். உலகில் உள்ள சில சிறந்த மற்றும் மிகவும் ஆர்வமுள்ள ரசிகர்களை நான் அனுபவிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×